Our Feeds


Saturday, September 11, 2021

www.shortnews.lk

BREAKING: A/L & O/L பரீட்சைகள் குறித்த திகதிகளில் நடைபெறுவதில் சந்தேகம்? வெடித்தது புதிய சர்ச்சை!

 



கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த திகதிகளில் பரீட்சைகள் நடைபெறுமா என்பதில் தற்போது சந்தேகம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »