Our Feeds


Saturday, November 27, 2021

SHAHNI RAMEES

அளவுக்கு மீறி மண்ணெண்ணெய் கொள்வனவு செய்யமுடியாது – வெளியானது புதிய கட்டுப்பாடு

 

பலாங்கொடை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரம் பெற்றுக்கொள்ள வரையறைகள்

விதிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனா்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியததாக இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த நாட்களில் ஒருவர் 10 லீற்றர் வழங்கப்பட்டதாகவும், அந்த அளவு தற்போது 5 லீற்றராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »