Our Feeds


Friday, November 5, 2021

ShortNews Admin

சிறை தண்டனை பெற்ற தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்குவதா? - எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார் Prof. ரிஸ்வி ஹஸன்

 


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


நான் குரு­மார்­களை கெள­ர­விப்­பவன். என்­றாலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனா­தி­பதி செய­ல­ணிக்கு சிறைத்­தண்­டனை அனு­ப­வித்த தேரர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டதை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதனை எதிர்ப்­ப­தற்­கா­கவே தேசிய ஒற்­றுமை மற்றும் ஒரு­மைப்­பாட்­டுக்­கான செய­ல­கத்­தி­லி­ருந்து (ONUR) எனது பத­வியை இரா­ஜி­னாமா செய்தேன் என அச்­செ­ய­ல­கத்தின் பணிப்­பாளர் சபை உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஹஸன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.


அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; நாட்டில் சிங்­கள, தமிழ் முஸ்லிம், கிறிஸ்­த­வர்கள் பிரிந்து வாழக்­கூ­டாது. அவர்கள் ஒற்­று­மைப்­பட்டு வாழ­வேண்டும். இதற்­கான பொறுப்­பினை அர­சாங்­கமே ஏற்­க­வேண்டும். இதற்கு அரச தலைவர் ஒத்­து­ழைக்க வேண்டும்.


ஆனால் இன்­றைய சூழலில் ஜனா­தி­பதி செய­ல­ணி­யொன்று பொருத்­த­மற்ற ஒரு­வரின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் தேசிய ஒற்­றுமை மற்றும் ஒரு­மைப்­பாட்­டுக்­கான வாய்ப்பு இல்­லாமற் போயுள்­ளது. அதனால் எனது பணி­யினைத் தொடர்ந்தும் முன்­னெ­டுக்க இய­லாத நிலையில் உள்ளேன். இத­னா­லேயே எனது பத­வியை இரா­ஜி­னாமா செய்தேன்.


நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி 2021 ஜன­வரி மாதம் என்னை இப்­ப­த­விக்கு நிய­மித்தார். ‘எனது இராஜினாமா கடிதத்தை நீதியமைச்சருக்கும், செயலகத்தின் தலைவருக்கும் அனுப்பிவைத்துள்ளேன்’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »