Our Feeds


Tuesday, December 28, 2021

ShortNews

பதவி நீக்கம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ பதில்



தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஜனாதிபதியோ அல்லது வேறு எவரும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தன்னையும், விமல் வீரவன்சவையும், வாசுதேவ நாணயக்காரவையும் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக இன்று தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றால் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் தானும் ஏனைய மூன்று அமைச்சர்களும் எவ்வித தவறும் செய்யவில்லை என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »