பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இணையவுள்ளார்.
அவர் எல்.பி.எல் தொடரில் பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, ஷஹீன் ஷா அப்ரிடி இம்முறை எல்.பி.எல் தொடரில் கண்டி ரோயல்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
