(எம்.மனோசித்ரா)
சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமானது. பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.
இந்த வீதி நிர்மாணத்தின்போது நிலங்களையும் சொத்துக்களையும் இழந்த பிபில, ரிதீமாலியத்த, பதியத்தலாவ மற்றும் மஹாஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவு மக்களுக்கு 12.4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.