(எம்.எப்.எம்.பஸீர்)
பொரளை தேவாலய குண்டு மீட்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வேதியர் பிரன்சிஸ் முனீந்ரன் உள்ளிட்ட மூவர் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கும்போதே அவர் இதனை வெளிப்படுடுத்தினார்.
அத்துடன் சம்பவம் தொடர்பான உண்மையை கண்டறிவதற்கும், உண்மையான சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் நியாயமானதும் நீதியானதுமான விசாரணை நடத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராயுமாறும், தற்போதைய விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய பங்குத் தந்தை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
இதன்போது இந்த விடயத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சிசிடி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சார்பில் அதன் உதவி பொலிச் அத்தியட்சகர் நெவில் டி சில்வா மன்றில் ஆஜராகி மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றை நீதிமன்றுக்கு கையளித்தார்.
இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.