கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
இதன்படி, இன்று (08) காலை 8 மணி முதல் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.