நாட்டில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் திட்டம், ஓரிரு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருத்தல் கட்டாயமானது என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், இந்த திட்டத்தை ஓரிரு வாரங்களுக்கு பிற்போட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.