மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலகுவதற்கும் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் பதவிகளுக்கு பயந்து பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வேலை செய்பவர்கள் இல்லை, பதவிகளை விட்டு விலக வேண்டுமாயின் அதற்கும் தயாராக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.