(பாறுக் ஷிகான், ஹுதா உமர், கனகராசா சரவணன்)
பின்னர் அவர் சம்பவ தினமான வியாழக்கிழமை அதிகாலை அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளன.
இதனை அடிப்படையாக கொண்டே தற்போது பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(முன்னைய செய்தி) அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இஇந்த விசாரணைகளில் குறித்த பெண் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் அவரிடம் காணப்பட்ட தங்க நகைகளும் கொள்னையிடப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்