Our Feeds


Saturday, January 8, 2022

ShortNews

பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேம் ஜயந்தவுடன் தொலைபேசியில் பேசிய மஹிந்த



இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்தவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு பிரதமர் இவ்வாறு தெரிவித்ததாக அறியமுடிகிறது.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்ட விடயத்தை ஷிரந்தி ராஜபக்ஷ ஊடாகவே பிரதமர் அறிந்து கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (தமிழன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »