இலங்கைக்கு இந்தியா பாரிய நிதி பலத்தை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.