(அசார்தீன்)
புத்தளம் பகுதியில் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இவரது சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸ் பிரிவினர் சென்று பார்வையிட்டனர். இந்தச் சம்பவம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.