Our Feeds


Thursday, March 10, 2022

SHAHNI RAMEES

சுதந்திர கட்சி தலைமையில் 11 கட்சிகளை இணைத்து பாரிய கூட்டணி அமைப்போம்! - தயாசிறி

 

ஆளுந்தரப்பின் 11 பங்காளிக் கட்சிகளுடனான பயணத்தை இடைவிடாமல் தொடர்வோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் 11 கட்சிகளுடன் இணைந்து பாரிய கூட்டணியை அமைத்து முன்னோக்கிச் செல்வோம்.



மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பதவிகளை துறந்து வீதிக்கு இறங்கிப் போராடவும் தயாராக இருப்பதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அனைத்து தொகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஊடாக கட்சியை பலப்படுத்தி அடுத்த பயணத்தை வெற்றிகரமாக தொடர்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »