இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 18,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் கொடுப்பனவு (போனஸ்) வழங்க தீர்மானித்துள்ளது.
இந்த வாரம் கூடிய பணிப்பாளர் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டும் 5,200 ஊழியர்களுக்கு மூன்று முறை கொடுப்பனவு வழங்க 1560 மில்லியன் ரூபா பணம் செலவிட்டுள்ளது.