Our Feeds


Tuesday, April 30, 2024

ShortNews

BREAKING: 11 மாவட்டங்களுக்கு இடி, மின்னல் தாக்கம் குறித்து கடும் எச்சரிக்கை.



இன்று இரவு 10.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 11 மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »