T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய மற்றும் இங்கிலாந்து அணி இன்று (30) அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூன் 1 முதல் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை BCCI இன்று அறிவித்துள்ளது.
அணித்தலைவராக ரோஹித் சர்மாவும் துணை தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணித்தலைவராக ஜோஸ் பட்லர் அத்துடன், உபதலைவராக மொயீன் அலி பெயரிடப்பட்டுள்ளார்.