Our Feeds


Friday, March 18, 2022

SHAHNI RAMEES

எரிபொருள், மருந்துகள், எரிவாயு இல்லை… ஒரு வாரத்தில் மூடப்படும் நிலையில் அரச மருத்துவமனைகள்.

 

அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும்


அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால், இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.


மருத்துவமனைகளில் உள்ள இந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு வழங்காமல் அரசு செயலற்ற கொள்கையை பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த மருத்துவர் ருக்ஷான் பெல்லன,



‘இன்னும் ஒரு வாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளும் மூடப்படும். வாகனங்களில் பணிக்கு வரும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு எரிபொருள் பிரச்னை ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் உணவு சமைப்பதற்காக சமையல் எரிவாயு பிரச்சனை ஏற்படலாம்.



நோயாளிகளுக்கு கொடுக்க மருந்து இல்லை. இந்த பிரச்னைகளை அரச அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்த நிலைமை அதிகரிக்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்களா? இது அதிகரித்தால், ஒட்டுமொத்த மருத்துவமனை அமைப்பும் முடக்கப்படும். அரசு மருத்துவமனை சேவையை அத்தியாவசிய சேவையாக்குவது பயனற்றது. மருத்துவர்கள், ஊழியர்கள், பணிக்கு வரும் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என்றால். நீங்கள் எப்படி வேலைக்கு சமூகமளிப்பது?



களுபோவில வைத்தியசாலையில் உள்ள உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மற்ற மருத்துவமனைகளிலும் இதே நிலைதான். என தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »