Our Feeds


Wednesday, March 16, 2022

ShortNews

MP ஆகவும், அமைச்சராகவும் என்ன தகுதியிருக்கிறது? - நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு நிதியமைச்சருக்கு அறிவித்தல்



அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய பதவிகளை வகிக்க சட்டரீதியாக எந்தத் தகைமைகளும் இல்லையென தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நீதிமன்றுக்கு விளக்கமளிக்க மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த மனு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா முன்னிலையில் அழைக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, பிரதிவாதி பெசில் ராஜபக்ஷவிடம் அறிவித்தல் கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது அமைச்சர் பெசில் ராஜபக்ஷவோ அல்லது அவரது சட்டத்தரணியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இந்நிலையில், குறித்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்பி, வழக்கை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதியரசர் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

வண. உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லசில் டி சில்வா ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »