Our Feeds


Friday, April 22, 2022

ShortTalk

400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான மீள் செலுத்துகை காலம் நீடிப்பு

 

இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) கடன் வசதி அடிப்படையில் வழங்கப்பட்ட  400 மில்லியன் அமெரிக்க டொலருக்கான மீள் செலுத்துகை கால எல்லையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நீடித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தியா வழங்கிய 400 மில்லியன் டொலருக்கான மீள் செலுத்துகை காலம் இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »