Our Feeds


Friday, April 29, 2022

ShortNews Admin

எரிபொருள் கேட்டால் துப்பாக்கி சூடு- இந்த நாட்டில் தொழிலாளர் தினமா?

 

பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒருபோதும் பாதுகாக்கப்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெளியேறியதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தற்போதைய தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெறும் எனவும் அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி அனைத்து இலங்கையர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு தீர்வைக் கோரியதாக தெரிவித்த அவர், நேற்று (28) மக்கள் வீதிக்கு இறங்கியமைக்கு காரணம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காகவே எனவும் குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »