Our Feeds


Tuesday, April 26, 2022

ShortTalk

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயலும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள்



(எம்.எப்.எம்.பஸீர்)


மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

சட்டத்தரணிகள் குழுவொன்று, இது தொடர்பில் இன்று (26) சட்ட மா அதிபர் திணைக்களத்தில் வைத்து சட்ட மா அதிபரை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »