Our Feeds


Sunday, April 17, 2022

ShortTalk

புதிய அமைச்சரவை இன்று அல்லது நாளை - ஹாபிஸ் நசீர், அலி சப்ரி ரஹீமுக்கும் பதவிகள் என தகவல்.



புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், புதிய அமைச்சரவை கூட்டத்தை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,

புதிய அமைச்சரவை 15 அமைச்சர்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோர் இடம்பிடிக்கமாட்டார்கள் என அறிய முடிகின்றது.

அதேவேலை கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள், புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் பதவிகளை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

அத்துடன், 20வது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்து ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகப்படுத்த உதவிய ஹக்கீமின் மு.க மற்றும் ரிஷாதின் அஇமக கட்சிகளை சேர்ந்த ஹாபிஸ் நசீர், அலி சப்ரி ரஹீம் ஆகியோரில் ஒருவருக்கும் அமைச்சுப் பதவியும் மற்றவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »