Our Feeds


Thursday, April 14, 2022

ShortNews

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு...!

 

எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் உதவியுடன் 10 மில்லியன் டொலர் எரிவாயு இறக்குமதியைப் பெற்றதாக லிட்ரோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், எதிர்காலத்தில் 8,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு வழங்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் நிலையான எரிவாயு விலைகள் இல்லாததாலும், கடந்த இரண்டு மாதங்களாக போதிய நாணயக் கடிதங்கள் வழங்கப்படாததாலும், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததாலும் தற்போது அனைத்து எரிவாயு கையிருப்புகளும் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »