Our Feeds


Sunday, April 24, 2022

ShortTalk

எதிர்வரும் மூன்று நாட்கள் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு...!

 

எதிர்வரும் மூன்று நாட்களில் (25,26,27) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மூன்று நாட்களில் (25,26,27) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »