நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் ஏராளமான பொதுமக்கள் நாட்டின் தேசியக்கொடியுடன் தமது போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட கதாகைகளையும் ஏந்தியுள்ளனர்.
அத்தோடு, தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து குறித்த போராட்டத்திற்கு பெருமளவானவர்கள் பங்கேற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.