ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அதன் தலைவர் ஐரோப்பிய யூனியத்தின் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியோன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியோன், வெள்ளிக்கிழமை உக்ரைன் சென்று ஜனாதிபதி வெலோதிமீர் ஸெலென்ஸ்கியை சந்தித்து உக்ரைன் நிலவரம் குறித்து பேசியுள்ளார்.
மேலும், ரஷ்யப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்ட புச்சா பகுதியையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் பதிவிட்டுள்ள உர்சுலா வான் டெர் லியோன், “இந்த கொடுமைகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். உங்கள் போராட்டம் எங்களின் போராட்டமும்தான். ஐரோப்பா உங்கள் பக்கம் இருக்கிறது என்பதைச் சொல்லவே நான் இன்று கீவில் இருக்கிறேன்ய” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.