Our Feeds


Tuesday, April 26, 2022

ShortTalk

பிரதமர் & அரசாங்கம் பதவி விலக வேண்டும் - SLPP MPக்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு





பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP)  நாடாளுமன்றக் குழுவின் பெரும்பாலானோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறியுள்ளார்.


அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்காக பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என மேற்படி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதேவேளை, தான் பிரதமர் பதவியிலிருந்து ஒருபோதும்  தான் விலகப் போவதில்லை என மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆளுங்கட்சி எம்பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »