ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று (09) காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஜனாதிபதி பதிவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.