இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு விரைவானதும் நீண்டகாலத்துக்குமான ஒரு நிரந்தர தீர்வொன்று காணப்படவேண்டியது அவசியம் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நிவ்ஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.