முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி பயணிக்கும் இடங்களிலும், அவர் நிரந்தரமாக தங்கியிருக்கும் இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்பதனால், உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் வாசஸ்தலத்துக்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையில் வீதித் தடைகளை அமைக்குமாறு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.