Our Feeds


Tuesday, May 17, 2022

ShortTalk

மட்டு நீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள்!



(கனகராசா சரவணன்)


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தமை தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 55 பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ரி.தியதகேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.


மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக அழைத்து வரப்படவில்லை.

இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிலர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »