(வாஸ் கூஞ்ஞ)
இந்தப் போராட்டத்தின்போது ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏன் வன்கொடுமை’ ‘சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்து’ ‘சிறுவர்களே எமது எதிர்காலம்’ ‘சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்’ போன்ற பதாதைகளை தாங்கியவர்களாக கோஷங்களை எழுப்பினர்.
இதனால் குற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கின்றனர்
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் பொறுப்பான குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவது குற்றவாளிகயை உருவாக்குவதாகவே அமையும்.
எனவே சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கமே இணைய வேண்டும் எனக் கூறுகிறோம் மேலும் 9 வயது சிறுமி கொடூரமான கொலைகள் உண்மைத்தன்மை வெளிக்கொணர வேண்டும்
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த வன்முறைகள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றில் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன போன்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.