சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 35 பேர் கொண்ட குழுவினர் பாணந்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த அனைவரையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.