Our Feeds


Sunday, June 5, 2022

SHAHNI RAMEES

பங்களாதேஷில் கொள்கலன் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து. 5 பேர் உயிரிழப்பு


 பங்களாதேஷில் கொள்கலன் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 100இற்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

சிடகுண்டா (Sitakunda) பகுதியில் உள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின் போது 600 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், 5 பேர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் இரசாயன பெட்டங்கங்கள் இருக்கும் பகுதியில் தீ பற்றியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »