கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அன்றைய தினம் பதிவான 857 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 2,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 1,083 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.