அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக, கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதால், கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தில் உள்ள பணத்தை சுகாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.