ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் என்றும் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்க்கொள்ள தயார் என்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமைதொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.