எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகராக முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
