எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் அரச பஸ் சேவைக்கு முன்னுரிமை வழங்குவதை போன்று தனியார் பஸ்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இருப்பினும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.