எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
40,000 மெற்றிக் டன் எரிபொருளுடன் நாட்டுக்கு வரவிருந்த கப்பல் மீளவும் தாமதமாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமக்கு அறிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமை காரணமாக எரிபொருள் தாங்கி வரும் குறித்த கப்பல் நாட்டுக்கு வரும் சரியான திகதியை அறிவிக்க முடியாது எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.