ராஜபக்ஸ குடும்பத்தின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
World Express Services
எதிர்வரும் ஓரிரு வாரங்களில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் இருந்து விடை பெற தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஸ, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, அரசியலில் முழு நேரம் ஈடுபடவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
ராஜபக்ஸ குடும்பத்தில், கோட்டாபய ராஜபக்ஸவை தவிர ஏனைய அனைவரும் தனது அமைச்சு பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.
சமல் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, சசிந்திர ராஜபக்ஸ ஆகியோர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.