Our Feeds


Saturday, June 4, 2022

SHAHNI RAMEES

சீனா அன்பளிப்பாக வழங்கிய மருந்து பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன.

 

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்களுடன் விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொங்கொங்கில் இருந்து பி – 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »