ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக, இலங்கையின் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
பெசில் ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக அவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.