நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
எனவே அவரை பதவியிலிருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் நாடாளுமன்றம் அதற்கான முறைமையை மீறியுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தை காலம் தாழ்த்தாது கலைப்பதே சிறந்தது.
இவற்றைச் செய்வதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை நாடு இழக்க நேரிடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.