Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

முகத்துவாரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் ஹெரோயினுடன் கைது

 

கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் வைத்து அண்மையில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 75 ஆவது தோட்டம் பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 5 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.

இவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »