Our Feeds


Saturday, June 18, 2022

SHAHNI RAMEES

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி செயலிழப்பு


 நேற்று (17) இரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மின்பிறப்பாக்கியில் சுமார் 75 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாது. இதனால் தேசிய மின்வாரியத்தின் திறன் 45 சதவீதத்தில் இருந்து சுமார் 30 சதவீதமாக குறைவடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீர் மின்சாரம் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »