அஹங்கம-பஞ்சாலிய பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது, போதைப்பொருள் வர்ததகத்தில் ஈடுபடும் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் குறித்த இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அஹங்கம பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பஞ்சாலிய பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.