உக்ரைன் லுகான்ஸ்க் சுற்றுவட்டாரத்தில் பசியால் வாடும் மக்கள், பொலிஸார் வழங்கிய உணவுப் பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக திரண்டிருந்தனர்.
ரஷ்ய படையெடுப்பால் உருக்குலைந்த நகரங்களில் தொழில் உள்ளிட்ட அன்றாட தேவைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சேதமடைந்த வீடுகளில் வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற திண்டாடி வருகின்றனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொலிஸார் உணவு விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், Lysychansk நகரில் பொலிஸாரினால் வழங்கப்படும் உணவுகளை பெற மக்கள் திரண்டனர்.